பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானின் உள்நாட்டுத் தோல்விகளை மறைப்பதற்கான வழக்கமான தந்திரம் என்றும், அடிப்படை ஆதாரமற்றவை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகளை கூறுவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்த மக்களுக்குள் இருக்கும் நீண்டகாலப் பிரச்சனைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
















