இந்தியாவின் வெளியுறவுத் தூதரக உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஆப்கானிஸ்தான், மங்கோலியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான நிதியுதவி நடப்பு ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது..
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு நிதியுதவியை ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தன்னுடைய 9வது பட்ஜெட்டிலும் பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நம் நாட்டின் அண்டை நாடுகளுக்கான மொத்த நிதியுதவி 5 ஆயிரத்து 686 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூட்டானுக்கு 2 ஆயிரத்து 289 கோடியும், நேபாளத்திற்கு 800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு 400 கோடியும், மாலத்தீவுக்கான நிதி 8 சதவீதமாக குறைக்கப்பட்டு 550 கோடியாகவும் உள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு 150 கோடியும், மியான்மருக்கு 300 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 225 கோடியும், லத்தீன் அமெரிக்காவுக்கு முந்தைய ஆண்டை விட இருமடங்கு உயர்த்தி 120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வங்கதேசத்திற்கான நிதியுதவி ஒதுக்கீட்டில் மத்திய அரசு அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், வங்கதேசத்திற்கான நிதியை பாதியாக குறைத்து அறிவித்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
















