அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மைகளாக இருக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுகின்றன என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,ராகுல் காந்தியின் கேள்விக்கு டெல்லியில் பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் எந்த திருத்தத்தை குறிப்பிடுகிறார் என்று தனக்கு தெரியவில்லை என்றும், பொருளாதாரம் மற்றும் அதன் அடிப்படைகளும் வலுவாகவே உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளி, தோல்துறை, விவசாயிகள் தொழில் முனைவோர் மற்றும் சுயஉதவிக்குழு தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும் அது உண்மைகளாக இருக்க வேண்டும் என்றார்.
















