தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை எனவும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டிற்கு ரயில்வே துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 7 ஆயிரத்து 611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகம் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
















