தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
இது குறித்து மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள், ஏற்கனவே நேர்காணல்களை நடத்தியிருப்பது நீதிமன்ற உத்தரவுகளை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாகத் தேடுதல் குழுவின் செயல்பாடுகள் தொடர்வது சட்டப்படி நிலைக்காது என்றும்
இது மாநில அரசுக்கும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் தேவையற்ற நிர்வாக மற்றும் சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பரிந்துரைத்தபடி, யுஜிசி தலைவரின் பிரதிநிதியைத் தேடுதல் குழுவில் சேர்ப்பதற்கான உத்தரவை தமிழக அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்றும்
உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை, துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















