மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு நம்ப முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காகத் தனது உதவியாளர் மூலம் ரகசியமாக ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளைப் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸ் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது.
இந்நிலையில்,நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மெலிண்டா கேட்ஸ், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியாகியுள்ள தகவல்கள் தனக்கு நம்ப முடியாத சோகத்தை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், எப்ஸ்டீன் கோப்புகளில் கூறப்பட்டுள்ள பாலியல் அத்துமீறல்கள் மற்றும் நடத்தைகளுக்கு பில் கேட்ஸ் மற்றும் சம்பந்தப்பட்டவர்களே பதில் சொல்ல வேண்டும் என்றும், தனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
















