நிலக்கோட்டை அருகே நடந்த காதணி விழாவில் 20 மாட்டு வண்டிகளில் 200க்கும் மேற்பட்ட பொருட்களை தாய்மாமன் சீர்வரிசையாக வழங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் – மாலியபுரம் தம்பதிக்கு மகன், மகள் உள்ள நிலையில், குழந்தைகளின் காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், சகோதரியின் குழந்தைகளுக்கு 20 மாட்டுவண்டிகளில், 200க்கும் மேற்பட்ட பொருட்களை தாய்மாமன் வேல்முருகன் சீர்வரிசையாக கொண்டு சென்றுள்ளார்.
தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் இருசக்கர வாகனம், வெள்ளி பாத்திரங்கள், சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளார்.
இந்த காதணி விழாவில் ஏராளமான சொந்த பந்தங்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி சென்றனர்
















