மதுரை மாவட்டம் நாகமலை அருகே சோதனை ஓட்டம் செய்யப்பட்ட ராட்சத பலூன் வயல்வெளியில் தரையிறங்கியதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டனர்.
பாலமேடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு மாவட்டத்தின் பல பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்காக ராட்சத பலூன் தயாரிக்கப்பட்டது.
ஸ்கை வால்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அதன் பேரில் 7 பேர் அடங்கிய குழுவினர் பாலமேட்டில் இருந்து ராட்சத பலூன் மூலம் வானில் பறந்தபடி வந்தனர்.
அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் வடபழஞ்சி அருகே உள்ள வயல்வெளியில் பலூன் அவசரமாக தரையிறங்கியது.
அங்கிருந்த பொதுமக்களும், விவசாயிகளும் பலூன் தரையிறங்குவதை ஆச்சரியத்துடன் கண்டனர். இதனையடுத்து பலூனில் பயணித்த நபர்கள், கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
















