மும்பை-புனே விரைவுச்சாலையில் எரிவாயு டேங்கர் கவிழ்ந்ததால், வரலாறு காணாத வகையில் சுமார் 33 மணி நேரத்திற்கு போக்குவரத்து முடங்கியது.
புனேவிலிருந்து மும்பை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் அதோஷி சுரங்கப்பாதை அருகே நிலைதடுமாறி கவிழ்ந்தது.
டேங்கரில் கொண்டு வரப்பட்ட புரோப்பிலீன் என்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு கசியத் தொடங்கியதால், காவல்துறையினர் இருபுறமும் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தினர்.
இதனால் விரைவுச்சாலையில் போக்குவரத்து 33 மணி நேரத்திற்கு முற்றிலுமாக முடங்கியது. பின்னர் இரவு ஒன்றரை மணியளவில் போக்குவரத்து மெதுமெதுவாக சீரானது.
















