வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை 5.25 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை அவ்வப்போது மாற்றம் செய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரெப்போ வட்டி விகிதம் தொடரும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் விலைவாசி அதிகரிக்கும் போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
இதேபோல் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் போது ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்க ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும்.
















