நெல்லையப்பர் கோயிலில் சமபந்தி விருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் இன குழந்தைகளை, தங்கத்தேரை இழுக்க வைத்து பாஜகவினர் கௌரவப்படுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி, நெல்லையப்பர் கோயிலில் கடந்த 3ம் தேதி சமபந்தி விருந்து நடைபெற்றது.
இதில் நரிக்குறவர் இன குழந்தைகளை அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் இது தொடர்பாக நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சி சார்பில் தீண்டாமை வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நெல்லை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் கந்தசாமி தலைமையில், நரிக்குறவ இன சிறுவர்கள், பெரியவர்கள் அழைத்துவரப்பட்டு, தங்கத்தேர் இழுக்க வைக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கம் எழுப்பினர். இதனிடைய தங்களை தங்கத்தேரை வடம் பிடித்து இழுக்க வைத்து கௌரவித்த பாஜகவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
















