டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி RCB சாம்பியன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
குஜராஜ் மாநிலம், வதோதராவில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் உடன் மோதிய RCB, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி அணி, இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இமாலய இலக்கை சேசிங் செய்த RCB அணி, 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், ஜார்ஜியா வோல் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார்.
















