திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய தனி நபர் ஆணையம் அமைக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐயின் சிறப்பு புலனாய்வு குழு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய தனி நபர் ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, கூடுதல் தகவல் கிடைத்தால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
















