திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், அந்த இடத்திற்கு சென்றபோது அங்கு 8 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதை போலீசார் அறிந்தனர்.
இதனை தொடர்ந்து, 8 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், மாடுகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு வண்டிகளை மட்டும் சரக்கு வேனின் பின்னால் கட்டிக் கொண்டு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும், மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
















