செஷல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் பணிகளை சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு மேற்கொள்ளவுள்ளது.
செஷல்ஸ் நாட்டின் அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற பேட்ரிக் ஹொ்மினி, முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து சென்னை சிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவமனையின் தலைவர் ரவி பச்சமுத்துவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், நீண்ட கால அடிப்படையில் சுகாதார தீர்வுகளை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதன்படி சிம்ஸ் மருத்துவ குழுவினர் அடுத்த வாரம் செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு செல்லவுள்ளனர்.
அங்கு சுகாதார பராமரிப்பு வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் இந்த குழு ஆய்வு செய்யவுள்ளது.
தொடர்ந்து அவற்றை மேம்படுத்த அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து அடுத்தகட்ட பணிகளை சிம்ஸ் மருத்துவ குழு மேற்கொள்ளவுள்ளது.
















