டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் என கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவின்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச, அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகை தேவயானி, நடிகர் மணி உள்ளிட்டோர் விளையாடினர்.
இதனை தொடர்ந்து நடிகர் தேவயானி, கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நட்ராஜன், தற்போது உள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான ஒன்று என்றும், டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் எனவும் கூறினார்.
















