ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரரை தவறான முறையில் சீனா தகுதிநீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தியான்ஜிங் நகரில் ஆசிய இண்டோர் தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றில் இந்திய வீரர் மணிகண்டா ஹொப்ளிதார் என்பவர் தவறான தொடக்கம் எடுத்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் வீடியோ பதிவுகளைப் பார்க்கும் போது, சவுதி அரேபிய வீரர் தான் தவறான தொடக்கம் எடுத்துள்ளார்.
இதனால் நடுவர்களின் முடிவு குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு அநியாயமானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















