தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ள நிலையில், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக அந்த கட்சியின் தலைவர்கள், நிர்வாகிளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குழுவின் தலைவராக வி.பி.துரைசாமி, துணை தலைவராக பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















