19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் குவித்தது. இதையடுத்து 412 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
முடிவில் அந்த அணி 40 புள்ளி 2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை 6வது முறையாக இந்திய அணி கைப்பற்றியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றதை, நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















