இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பில் சந்தை வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி அதிகரிப்பு பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியுள்ள அவர், இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவு மேலும் வலுப்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
















