வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரரை மீட்க உதவும்படி பிரதமருக்கு நடிகை செலினா ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் சிறப்பு படையில் அதிகாரியாக பணியாற்றியவர் விக்ராந்த் ஜெட்லி.
இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தபோது தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணமோ, குற்றச்சாட்டோ இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை.
இந்நிலையில் 18 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் பிடியில் இருக்கும் விக்ராந்த் ஜெட்லியை மீட்கும்படி அவரது சகோதரி செலினா ஜெட்லி ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
















