டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது…
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸை வென்ற அமெரிக்கா, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் விளாசினர்.
இதையடுத்து 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
















