முதலமைச்சரை சந்தித்து தனது குறைகளை சொல்ல விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தனது சகோதரியின் மகனை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் மதுரை மண்டல திமுக முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2011 முதல் தற்போது வரை தனது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றும், நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வீட்டிலேயே தங்கியுள்ளேன் என்றும் கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரியின் மகனை போலீசார் சுட்டு கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
















