பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு அளித்துள்ளது. .
கடந்த டிசம்பர் மாதம் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்றும், கட்சியின் உரிமைக்கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நீதிபதி புஷ்கர்னா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது
















