சென்னையில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ராஜஸ்தானி அசோசியேஷன் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலத் துறைகளில் சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் அசோசியேஷன் சார்பில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர், மருத்துவம் மற்றும் கல்வித்துறை பங்களிப்பிற்காக சுதா சேஷயன், ஓதுவார் சேவைக்காக சற்குருநாதன் மற்றும் கே.ஆர்.ராஜா உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கௌரவித்தார். மேலும் அவர்களுக்கு பதக்கமும், 2 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோசியேஷனின் முன்னாள் தலைவர் பிரவீண் டாட்டீயா, விருது வழங்குவதன் நோக்கம் மற்றவர்களும் சமூக சேவைகளில் ஈடுபடுவதற்காவே என்று கூறினார்.
















