பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கௌரவ விரிவுரையாளர்கள்,சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரைவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்க கல்லூரிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா காரை கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோல் திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
















