அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு - சிறப்பு தொகுப்பு!
Mar 28, 2026, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் நாடு கடந்த குற்றங்கள் தொடர்பான ‘கூட்டு செயல் திட்டத்துக்கு இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2023ம் ஆண்டு, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்

ட்ரூடோவின் குற்றச்சாட்டை அபத்தமானது, ஆதாரமற்றது என்று நிராகரித்த இந்தியா, கனடாவுடனான தூதரக உறவை நிறுத்தி வைத்தது. கனடாவில் இருந்த தனது உயர் ஆணையரையும் ஐந்து தூதர்களையும் திரும்ப அழைத்துக் கொண்ட இந்தியா,இந்தியாவில் இருந்த கனடா தூதர்களையும் வெளியேற்றியது.

இந்தச் சூழலில் நடைபெற்ற கனடா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான மார்க் கார்னி இந்தியாவுடனான உறவைச் சீரமைக்க முயற்சி எடுத்தார்.

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்து மார்க் கார்னி பேச்சு வார்த்தை நடத்தினார்.அதனை தொடர்ந்து தங்கள் நாட்டு தலைநகரங்களில் தூதரக உயர் ஆணையர்களை இரு தலைவர்களும் நியமித்தனர்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும் மார்க் கார்னியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உயர் லட்சிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டன.

தொடர்ந்து கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியையும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

இதற்கிடையே, கனடா பிரதமரின் துணைச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகரான திருமதி நதாலி ட்ரூயின், இந்தியாவுக்கு வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.

இந்நிலையில்,கடந்த வாரம் கனடாவின் பிரான்ஸ் மற்றும் மொனாக்கோவுக்கான தூதராக நதாலி டிரூயின் நியமிக்கப்பட்டார். தனது தூதரகப் பணிக்காக பாரிஸ் புறப்படத் தயாராகி வரும் நிலையில், கனடாவில் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் பிரச்சினைகள் குறித்த இருதரப்பு ஒத்துழைப்புக்கு வழிகாட்டவும், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் தொடர்பு அதிகாரிகளை நியமித்து நடைமுறை ஒத்துழைப்பை செயல்படுத்தவும் கூட்டுச் செயல் திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும் இருதரப்பு உளவுத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், சட்ட அமலாக்கத்தை நெறிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் போன்ற போதைப்பொருட்களின் சட்டவிரோதப் புழக்கம் மற்றும் நாடு கடந்த போதை பயங்கரவாத நெட்வொர்க் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க இந்த செயல் திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க, இணையப் பாதுகாப்பு கொள்கை மற்றும் இணையப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த தகவல் பகிர்வு தொடர்பான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கும், மோசடி மற்றும் குடியேற்ற அமலாக்கம் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த விவாதங்களைத் தொடர்வதற்கும் இருநாடுகளும் உறுதி யளித்துள்ளன.

கூடுதலாக கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியையும் சந்தித்து பேசியுள்ள அஜித் தோவலின் இந்த கனடா பயணம் தேசப் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

Tags: strengthen bilateral security cooperation.Canadian Foreign Minister Anita AnandIndiaCanadaNational Security Advisor Ajit DovalMark Carney
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!

Next Post

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

Related News

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

ராம நவமி- கிருஷ்ணகிரி ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம்!

விவசாய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை – அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

“பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியது”-ஏர்போர்ட் மூர்த்தி!

அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies