காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் முருக பெருமான் வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரத்தில் மேற்கு ராஜவீதியில் கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு
தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் அரோகரா பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
















