தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் 3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் 15 நிமிடத்திற்குள் நிறைவடைந்தது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் காரணமாக மேயர் இந்திராணி பொன் வசந்தம் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் மாநகராட்சி கூட்டம் 3 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது.
இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் மூன்று மாதங்களுக்கு பின் பொறுப்பு மேயர் நாகராஜன் தலைமையில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டு குடிநீர் திட்டம் அவசர அவசரமாக தொடங்கப்பட்டதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீ தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறி கையில் புகைப்படத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் புகைப்படத்தை கிழித்தெரிந்து அடாவடியில் ஈடுபட்டனர். பின்னர் பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீ அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
















