திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியாரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
குன்னத்தூர் அருகே உள்ள தேவாலய வளாகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளிக்கு தேவாலய பாதிரியாராகவும், தாளாளராகவும் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக பணியில் உள்ளார்.
இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர்.
அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் பாதிரியாரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















