கோவை அருகே முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறு பெற்றோர், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த அஜய் சில்விஸ்டர்-சரண்யா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை, Spinal Muscular Atrophy எனப்படும் முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மற்ற குழந்தைகளை போல இந்த குழந்தை வழக்கமாக கை, கால்களை அசைக்க இயலாது. இந்த நோயை குணப்படுத்துவதற்கான ஊசிக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும் என்பதால், பெற்றோர் திக்கற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
இதற்காக முதல்வர் மற்றும் பிரதமரின் தனிப் பிரிவுகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்தும் இதுவரை உதவி கிடைக்காத நிலையில், டிரஸ்டுகள் அல்லது பொதுமக்கள், தங்களால் ஆன உதவிகளை செய்யுமாறு குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















