வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாட்டில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அவருக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியை நோக்கி மக்களை அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும், இந்த வெற்றியானது வங்கதேச மக்கள் தாரிக் ரஹ்மான் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக ரீதியில் வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு அளிக்கும் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
















