புதுச்சேரியில் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கடற்கரை சாலையில் 2024 மற்றும் 2025ம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்களுக்கு சங்கரதா சுவாமிகள் என்ற விருதுகள் வழங்கப்பட்டன.
அப்போது சிறந்த திரைப்படங்களாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும், கடல் கன்னி ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டு இயக்குநர்களுக்கு விருது வழங்கப்பட்டன.
















