வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு
Jul 19, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 13, 2026, 09:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமமே இந்திய ஓவியக்கலைக்கும், கைவினை கலைக்கும் சான்றாக விளங்கி வருகிறது. அந்த கிராமம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பார்க்கும் இடமெல்லாம் ஓவியங்கள்…வீதிகள்தோறும் கைவினைப் பொருட்கள்…வீடுகள்தோறும் அழகிய அலங்காரங்கள்…

இதுதான், இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கிராமமான ரகுராஜ்பூர்.

ஓடிசாவின் புரி நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ரகுராஜ்பூரில் மொத்தமே 150 வீடுகள்தான் உள்ளன. ஆனால், அவை ஒவ்வொன்றிலுமே குறைந்தது 2 கைவினைக் கலைஞர்களும், ஓவியர்களும் இருக்கின்றனர்.

ரகுராஜ்பூர் கிராமத்தின் ஆன்மாவாக பட்டசித்ரா ஓவியங்கள் விளங்குகின்றன. ‘பட்டா’ என்றால் துணி. ‘சித்ரா’ என்றால் ஓவியம். பாரம்பரிய துணிகளில் இயற்கை வண்ணங்களை கொண்டு சித்திரங்களை வரைவதால், இந்த வகை ஓவியங்கள் பட்டசித்ரா என அழைக்கப்படுகின்றன.

புரி ஜெகன்நாதர் குறித்தும், இந்துப் புராணங்கள் பற்றியும், மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் குறித்தும் பட்டசித்ரா ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.


ஓவியங்களை தவிர்த்து, பாரம்பரிய முகமூடிகள், பனை ஓலை வேலைப்பாடுகள், காகிதக் கூழ் பொம்மைகள், மரச்சிற்பங்கள் உள்ளிட்டவைக்கும் ரகுராஜ்பூர் புகழ்பெற்று விளங்குகிறது. அத்துடன், புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான கேளுச்சரண மகோபாத்திரா (Kelucharan Mohapatra) பிறந்த ஊர் என்ற பெருமையும் இக்கிராமத்திற்கு உண்டு.

வீடுகள்தோறும் ஓவியர்களும், கைவினைக் கலைஞர்களும் உள்ளதால், ஒட்டுமொத்த கிராமமே ஒரு கலைக்கூடம் போல காட்சியளிக்கிறது. இந்த கிராமத்திற்குள் நுழைந்தால், ஏதோ திறந்தவெளி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற எண்ணம் பலருக்கும் எழும்.

2000ம் ஆண்டு இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை, (INTACH) ரகுராஜ்பூரை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது. இதன் மூலம் இக்கிராமம் மேலும் பிரபலமடைந்தது. பட்டசித்ரா ஓவியங்களை வாங்குவதற்காவும், கலைஞர்கள் ஓவியம் வரைவதைத் நேரடியாகப் பார்க்கவும் சுற்றுலா பயணிகளும், கலை ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ரகுராஜ்பூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Tags: RaghurajpurIndigenousCraftsHeritageArtisanIndiaodishavillageculture
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

Next Post

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

Related News

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

Load More

அண்மைச் செய்திகள்

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies