நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களில் தேசிய தரவரிசையில், முதல் 100 இடங்களில், தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.
அதன்படி, 2017ஆம் ஆண்டு 83 ஆயிரத்து 859 பேர் தேர்வு எழுதியதில், 32ஆயிரத்து 570 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
2018 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து ஏழாயிரத்து 456 பேரில், 45 ஆயிரத்து 336 பேரும், 2019 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 பேரில், 59ஆயிரத்து 785 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
2020 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய 99 ஆயிரத்து 610 பேரில், 57 ஆயிரத்து 215 பேரும்,2021 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து எட்டாயிரத்து 356 பேரில், 57 ஆயிரத்து 215 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
2022 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேரில், 67 ஆயிரத்து 787 பேரும் 2023 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேரில், 78 ஆயிரத்து 693 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
2024 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேரில், 89 ஆயிரத்து 198 பேரும், 2025 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 715 பேரில், 76 ஆயிரத்து 181 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
நடப்பாண்டு நீட் மறுதேர்வு எழுதிய ஒரு லட்சத்து எட்டாயிரத்து 601 பேரில், 61 ஆயிரத்து 306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய தரவரிசையில், முதல், 100 இடங்களில், தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.
















