பாஜக அரசு பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ஒரு காலத்தில் மருத்துவராவது என்பது மாணவர்களின் கனவாக இருந்ததாகவும், பாஜக அரசு பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை பாஜக அரசு உயர்த்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
திறமையான இளைஞர்கள் கல்வி பயில்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் புதிய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இத்தகைய முயற்சிகள் இந்தியாவுக்கு ஏராளமான சிறந்த மருத்துவ நிபுணர்களை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
















