தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் பேசிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 35 கோடி ரூபாய் தருவதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும்,
ஆனால் பேரம் நடைபெற்றதாக கூறிய நாட்களில் இருந்து நான்கு நாட்களுக்கு பின் வழக்கு பதிவு செய்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திருவல்லிக்கேணி காவல்துறை விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















