நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!
Jul 18, 2026, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மனின் உடல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சிறைக் காவலர்கள் 3 பேர் மற்றும் சிறை கைதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், உரிய நிவாரணம் கேட்டும் சபரி வர்மனின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சபரிவர்மனின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர்.

அப்போது, சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை அமைச்சர்கள் வழங்க முன்வந்தனர். இதனை நிராகரித்துவிட்ட குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.

பின்னர், வழக்கறிஞர்கள் மற்றும் ‘பப்ளிக் வாய்ஸ்’ அமைப்பு பிரேத பரிசோதனை வீடியோவை ஆய்வு செய்த பிறகு, சபரி வர்மனின் அக்கா கெளதமி உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து சபரிவர்மனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சபரிவர்மனின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது அமரர் ஊர்தியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள், சபரி வர்மன் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அதுவுரை உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், சபரி வர்மனின் மனைவி ஆனந்தவல்லியிடம் அரசு வழங்கிய நிவாரணம் மற்றும் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டு சபரிவர்மனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags: prolonged protest.Eethangaduselling GutkhakanyakumariSabari VarmanNagercoil prisonSabari Varman last rides
ShareTweetSendShare
Previous Post

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

Related News

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies