விக்ரம் – 1 ராக்கெட் புவியின் தாழ் வட்டப் பாதையை நோக்கி ஏவப்பட உள்ள நிலையில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில்,
விக்ரம் -1 ராக்கெட்டின் பயணம் என்பது இந்தியாவின் விண்வெளி பயணத்துக்கான வரலாற்று எல்லை எனவும், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸிலிருந்து ஏவப்படும் இந்த ராக்கெட்டின் 4 நிலைகள் விரைவான சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்
தொடர்ந்து அவரது பதிவில், விக்ரம் -1 ராக்கெட் மூலம் நம் நாட்டு இளைஞர்களின் திறமை, உறுதிப்பாடு, தொழில்முனை மனப்பான்மை வெளிப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்
மேலும், விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த வரலாற்று முன்னெடுப்புக்கு அனைத்து இந்தியர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
















