மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பூங்கா ரயில் நிலையம் உட்பட நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட நிலையில், அதில் தமிழகத்தில் சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட மூன்று ரயில் நிலையங்களும் அடங்கும். இந்த ரயில் நிலையங்களை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்தவாறு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்கள் பாரத் மாதகி ஜே என உற்சாக முழக்கமிட்டனர்
முன்னதாக ரயில் நிலையத்தில் பெண்கள் பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ரயிலில் ஏறி அங்கிருந்த மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து, ஜலந்தர் – வாரணாசி இடையேயான ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
பயணிகளின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய ‘சிட்டி சென்டர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி வழித்தடங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள.
















