மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
சியபாஸின் கடற்கரை அருகே பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ரிக்டரில் 7.4 என பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு 7.3 என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5.2, 4.5 மற்றும் 6.1 என அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
















