தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தன்னிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், IPDS நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் இருந்து கொண்டு எம்எல்ஏக்களை இழுக்கும் வேலைகளில் ஈடுபட்டதாக லட்சுமணபெருமாள் என்பவருக்கு எதிராக லுக் அவுட்நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கொரட்டூரைச் சேர்ந்த பைனான்சியர் கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் வெங்கடேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போலீசார், கருணாநிதி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
















