பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் - 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி - சிறப்பு தொகுப்பு!
Sep 2, 2026, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் (Mastung) பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலில் 45 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுசிஸ்தான் விடுதலைப் படை அறிவித்துள்ளது.அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பலுசிஸ்தானில் உள்ள மஸ்துங் (Mastung) பல ஆண்டுகளாகவே பலூச் விடுதலை இராணுவத்தின் தாக்குதல்களின் மையமாக இருந்து வருகிறது. 2018-ல் அப்பகுதியில் தேர்தல் பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். 2023-ல் மசூதிக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 55-க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

பலூசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு மீது ‘பலூச் விடுதலைப் இராணுவத்தினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 45 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப் படுகிறது.

தனிப்பட்ட தாக்குதல்களில் இருந்து, பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பதுங்கித் தாக்குதல்கள், கூடுதல் படைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் நீடித்த துப்பாக்கிச் சண்டைகள் என பிரிவினைவாத அமைப்பு தனது அதிநவீன நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இது குறித்து எந்தஅதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிவிக்காத பாகிஸ்தான் அரசு, தாக்குதலுக்குப் பிறகு, சிக்கிக்கொண்ட வீரர்களை மீட்கவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் (gunship helicopters) கூடுதல் படைகளையும் மஸ்துங் பகுதிக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BLA-வின் செய்தித் தொடர்பாளர் ஜியந்த் பலூச் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் அமைப்பின் உயர்தர “ஃபதா படைப்பிரிவு” (Fatah Squad) பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், அப்பகுதிக்கு விரைந்து வந்த கூடுதல் படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப் பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்றதால் பலூசிஸ்தானை சிந்து மாகாணத்துடன் இணைக்கும் பாகிஸ்தானின் மிக முக்கியமான சாலைத் தொடர்புகளில் ஒன்றான குவெட்டா-கராச்சி தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்புப் படைகள் மூடியதால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகள் வழியில் சிக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க குவெட்டாவில் உள்ள சிவில் மருத்துவமனை, கௌஸ் பக்ஷ் ரைசானி நினைவு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பல மருத்துவ மையங்களில் பலூசிஸ்தான் அரசு அவசர நிலையை அறிவித்தது.

பாகிஸ்தானின் ராணுவ வாகன அணிவகுப்புகள், பாதுகாப்பு தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் மீண்டும் குறிவைத்து பலூச் விடுதலை இராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். இது பலுசிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவாலை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Tags: Mastung areasuicide attack near mosque.pakistanBalochistan provinceBalochistan Liberation Army45 Pakistani soldiers killed
Share
Tweet
SendShare
Previous Post

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

Next Post

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies