குதிரை பேர விவகாரம் தொடர்பாக கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயன்ற குதிரை பேர வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் கரூர் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இ
தைத்தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைத்து, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
















