திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்துள்ளார்.
ஆடிட்டர் ரமேஷின் 13ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஊட்டி எம்எல்ஏ போஜராஜன், இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊட்டி எம்எல்ஏ போஜராஜன், அறநிலைத்துறையின் செயல்பாடுகள் ஓரளவு வரவேற்கத்தக்கது என கூறினார்.
பழனி கோயில் சொத்து விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் குறிப்பிட்டார்.
















