அமெரிக்காவின் டெக்சாஸில் கன மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் பாயும் நியூசெஸ் (Nueces) ஆற்றின் நீர்மட்டம் அதிவேகமாக உயர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நியூசெஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள FM 481 என்ற நெடுஞ்சாலைப் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நியூசெஸ் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உவால்டே மற்றும் அதன் அண்டை மாவட்டமான கெர் (Kerr) கவுண்டியில் பெருவெள்ளத்தால் ஏராளாமானோர் உயிரிழந்த நிலையில், அவசரக்கால மீட்புக் குழுவினர் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
















