பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி, ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அண்மையில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக சில மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. வருமான வரி சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டுமென, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.
















