அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?
Sep 2, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

Manikandan by Manikandan
Feb 13, 2026, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா தனது நன்மைகளுக்காக பாகிஸ்தான் டாய்லெட் பேப்பர் போன்று பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா மீது பாகிஸ்தானின் திடீர் கோபத்திற்கு காரணம் என்ன?

அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது முதல், வாஷிங்டன் உடனான உறவு பாகிஸ்தானுக்கு கசப்பை ஏற்படுத்தி வருகிறது… இந்த சூழலில் அண்மையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், அமெரிக்கா, பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட மோசமாக நடத்தியதாகக் கூறினார். இந்த தகவல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1999ம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு வாஷிங்டனுடன் இஸ்லாமாபாத் நல்லுறவை பேண முயன்றதாகக் கூறினார். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் உடனான உறவு, நாட்டிற்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.. அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டை அதன் நன்மைக்காக சுரண்டுவதாக குற்றம்சாட்டிய கவாஜா ஆசிப், அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிய பின்னர் டாய்லெட் பேப்பரை போன்று பாகிஸ்தானை தூக்கி எறிந்துவிட்டதாக கடுமையாக சாடினார்… பாகிஸ்தான் பெரும்பாலும், அதன் பயங்கரவாத வரலாற்றை மறுக்கிறது என்றும், இது கடந்த காலத்தில் சர்வாதிகாரிகள் செய்த தவறு என்பதையும் ஒப்புக்கொண்டார்…

2001-ம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில், பாகிஸ்தான் இணைந்ததாகவும், அந்த செயல்பாடு தாலிபான்களுக்கு எதிராக திரும்பியதாகவும் கவாஜா ஆசிப் குறிப்பிட்டார்.. ஆப்கானிஸ்தான் போருக்கு பின் பல ஆண்டுகளுக்கு பிறகு பிராந்தியத்லிருந்து அமெரிக்கா வெளியேறியபோதும், பாகிஸ்தான் நீண்டகால வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு போர்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ள கவாஜா ஆசிப், இன்று பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதம் கடந்தகால தவறுகளுக்கு பதிலடி என்றும் ஒப்புக்கொண்டார்.

ஆப்கானிஸ்தான் உடனான மோதலில் பாகிஸ்தானின் ஈடுபாடு என்பது மதக் கடமையால் உந்தப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்த தவறவில்லை.. ஜிகாத் என்ற கொடியின் கீழ் பாகிஸ்தானியர்கள் போராட அனுப்பப்பட்டதை பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக் கொண்டார். ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகிய இரண்டு முன்னாள் ராணுவ சர்வாதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் இணைந்ததாகவும், அவர்கள் இஸ்லாத்திற்காக இணையவில்லை மாறாக, அமெரிக்காவை திருப்திபடுத்தவே இணைந்ததாகவும் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். பயங்கரவாதம் என்பது கடந்த காலத்தில் சர்வாதிகாரிகள் செய்த தவறுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி என்று அமைச்சர் கூறினார்.

இஸ்லாமாபாத் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்று கூறிய ஆசிஃப், பாகிஸ்தானின் தவறுகளை ‘மீளமுடியாதவை’ என்று குறிப்பிட்டார்… இந்தப் போர்களை நியாயப்படுத்த பாகிஸ்தானின் கல்வி முறை மறுவடிவமைப்பு செய்யப்பட்டதாகவும், இன்றும் உட்பொதிக்கப்பட்ட சித்தாந்த மாற்றங்களுடன் இருப்பதாகவும் ஆசிஃப் குறைகூறினார்… பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள், இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமாபாத்தின் செயல்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது…

Tags: toilet paperstrongly accusedDefense Minister Khawaja AsifpakistanusDefense Ministerpakistan newsbenefits
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

Next Post

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies