பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நட்சத்திர கலை விழா கோலாகலமாக தொடங்கியது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நட்சத்திர கலைவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 3 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டிற்கான கலை விழாவை பல்கலைக் கழகத்தின் வேந்தர் சீனிவாசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் வேந்தருக்கு, மாணவ-மாணவிகள் இணைந்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
















