ஆட்சியில் பங்கு என்பது தங்களின் உரிமை எனவும் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் என்றும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என தெரிவித்தார்.
இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களைதான் என தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வும் ஆட்சியில் பங்கு என்பதும் எங்களின் உரிமை என தெரிவித்துள்ள மாணிக்கம் தாக்கூர், மக்கள் இதனை தீர்மானிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















